ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
About Ayyappan Website :
Ayyappan information website contains informations about ayyappan & sabarimalai temple and Devotional (god) desktop Wallpapers download- shree dharmasastha,vinayagar,krishanr,devi durga still wallpapers ,Ayyappan Video Songs - Vilakkupoojai Song - Veeramani dhasan,Poi Indri Mei Illai - K.J.yesudas,Sadasivan Magane - Veeramani dhasan,Enga Karuppa Swamy - Veeramani dhasan,Yenge manakkuthu - Ayyappan song,Sabarimalai yathirai Song,Pathinettu padi song,Hariyum Haranum - Ayyappan Song,Saranam Ponnaiappa Swamy Ponnaiyappa Song,Bagavan saranam Bagavathi saranam Ayyappan video song.Play & Share Devotional mp3 songs - Ayyappan Songs of K.Veeramani,Veeramanidhasan,K.J.Jesudas,Karuppaswamy Songs & more.we will publish temple function invitation and photos & videos of that function in our website.so,if you intrested you can send about your temple function details and Photos & videos of that function to e-mail id : templefunctions@swamysaranam.co.in we will publish your temple function informations in our website.
VILAKKUPOOJAI FUNCTION PHOTOS 2015
Hindhu Gods Wallpapers
Ayyappan mp3 Songs download
Ayyappan video songs

 

 

Latest Updates

Vilakkupoojai Function 2016 Photos Video

விளக்குபூஜை விழா படங்கள் - டிசம்பர் மாதம் 2013

Sabarimalai Yathra Photos from Coimbatore to Erimeli In Year 2013 Photo Gallery

Peruvazhi Pathai Photos - From Erimeli to Sannithanam In Year 2013 Photo Gallery

God Prayer By Ayyappan Devotees in Flash

ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வதன் மகிமை!

சன்னிதானத்தில் ஆன்லைன் கியூ புதிய முறையில் மாற்றி அமைப்பு!

சபரிமலையில் தரிசனத்திற்கு இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

சபரிமலையில் 19 மணி நேரம் நடை திறப்பு!

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள

கங்கையும் பம்பையும்!

சபரிமலையில் 40 வகையான பூஜைகள்: 12 வகையான வழிபாடு பிரசாதங்கள்:

ஐயப்பன் பயோடேட்டா

சபரிமலை ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய்

ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்

சபரிமலை யாத்திரைக்கு இருமுடி எடுத்துச் செல்பவர்களுக்கான குறிப்புகள்!

மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டியவை!

SABARIMALAI CALENDAR 2014-2015! Opening and closing of Sabarimala Sree Dharmasastha Temple for the year 2014 - 2015

ஐயப்பனின் மூன்று பணிகள் (அவதரித்த காரணம்)

சபரிமலையின் ராஜாவான ஐயப்பன் மூன்று செயல்களை செவ்வனே முடிப்பதற்காக அவதாரம் எடுத்தார். அசுரகுல அரசன் பிரம்மாசுரனை அழித்திட, தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்
படுத்தும் மகிஷி எனும் அரக்கியை அழிக்க, குழந்தை பாக்கியம் இல்லாத சிவபக்தரான ராஜசேகர மன்னனுக்கு குழந்தை பேறு கிடைக்கச் செய்ய. இப்பணிகளைக் குறுகிய காலத்தில் முடித்து விட்டார் ஐயப்பன்.

தவமிருக்கும் ஐயப்பன்:தான் அவதாரம் எடுத்து வந்ததன் நோக்கத்தை முடித்த ஐயப்பன், பம்பை நதிக்கரையில் தவம் இருக்கப்போவதாக தனது வளர்ப்புத் தந்தை பந்தள மகாராஜாவிடம் சொல்லிவிட்டு சபரிமலைக்கு வந்துவிட்டார். இவர், கார்த்திகை முதல் நாளில் இருந்து மார்கழி 11 வரையிலும், மகரசங்கராந்தி தினத் தன்றும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக தவநிலையில் இருந்து அருள்நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வதாகச் சொல்வதுண்டு.

சபரிமலை கோவில்:

சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம் தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்தலமாகும். மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி அய்யப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐய்யப்பன் கோவில் இருக்கிறது.

 
இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.
 
நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம். ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வோறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும்,
அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
 
இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறுக் கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.
 

இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி'') மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

மகத்துவம் மிக்க மகரஜோதி:

சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினத்தன்று (தை மாதாம் 1-ந் தேதி) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பல லட்சம் மதிப்புள்ள கற்பூரம் கொளுத்தப்படும். மாலை 6.40 மணியில் இருந்து 6.50 மணிக்குள் சபரிமலை கோவிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப்பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படும்.

இந்த ஜோதியை தரிசனம் செய்யும் லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் `சுவாமியே சரணம் அய்யப்பா' என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும். பொன்ணம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ அய்யப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.

குற்றங்களை பொறுத்தருள வேண்டும்:

அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக்காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா! காசி, ராமேசுவரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!


LATEST UPDATES
SABARIMALAI NEWS - LINKS

போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்

அவசர உதவி் - முக்கிய டெலிபோன் எண்கள் - சபரிமலை சன்னிதானம்

வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்

தங்கும் விடுதிகள் - சபரிமலை

சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்

ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும்

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

ஐயப்பனின் வேறு பெயர்கள்

சாஸ்தாவின் ஏழுகோயில்கள்

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை விவரங்கள்

குருசாமிகளின் கடமைகள்,மாலை கழற்றிய பிறகும் பிரம்மச்சரியம் கட்டாயம்,சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER